குலசேகரன்பட்டினம் தசரா 4-ம் திருநாள் - அன்னை முத்தாரம்மன் இன்று மயில் வாகனத்தில் எழுந்தருளல்


குலசேகரன்பட்டினம் தசரா 4-ம் திருநாள் - அன்னை முத்தாரம்மன் இன்று மயில் வாகனத்தில் எழுந்தருளல்
x

குலசேகரன்பட்டினத்தில் இன்று 4-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

உடன்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில்தசரா பெருந்திருவிழாவில் 4-ம் திருநாளான இன்று இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்குபல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

தசரா பக்தர்கள் அம்மன் வீதி உலா வரும்போதும், சுவாமிக்கு சிறப்பு அபிசேக வழிபாடுகள் நடக்கும் போதும் ,செல்போனின் படம் பிடிப்பதும். செல்பி எடுப்பதும் செல்போனில் நேரலையசெய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விரதம் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி, கோவிலுக்கு வந்து, மஞ்சல் கயிற்றினால் ஆனகாப்பு வாங்கி. வலது கையில் கட்டி விரதத்தை தொடர்ந்து வருகின்றனர், கோவிலில் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடிஇணை ஆணையர் அன்புமணி உதவிய ஆணையர் சங்கர் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தசரா குழுவினர் வந்து கடலில் புனித நீர் எடுத்து கோவில் வளாகத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதும் நடந்து கொண்டிருக்கிறது .

தூத்துக்குடி மாவட்ட மருத்துவத்துறை, போலீஸ் துறை, மின்சாரத்துறை போன்ற பல்வேறு அரசு துறை அதிகாரிகள் குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வலம் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story