குளத்தூர் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்


குளத்தூர் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குளத்தூர் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி காப்பு கட்டுதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், கூழ்வார்த்தல், ஊரணி பொங்கல், அரவான் தாலி கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி கூத்தாண்டவருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் கூத்தாண்டவர் எழுந்தருளினார். இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க, தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதையடுத்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story