குளித்தலை அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 4 பேர் வெற்றி


குளித்தலை அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 4 பேர் வெற்றி
x

குளித்தலை அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 4 பேர் வெற்றி பெற்றனர்.

கரூர்

குளித்தலை வட்டார அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி குளித்தலையில் ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் குளித்தலை வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 6-8, 9-10, 11-12 என்ற வகுப்பு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பல்வேறு வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று சதுரங்கம் விளையாடினர். இதில் இந்தப் பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி மித்ரா முதலிடத்தையும், சினேகா 3-ம் இடத்தையும் பெற்றனர். 9-ம் வகுப்பு மாணவி காவ்யா 2-ம் இடமும், 7-ம் வகுப்பு மாணவி அபி 3-ம் இடமும் பெற்றனர். வட்டார அளவில் வெற்றி பெற்ற இந்த மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Next Story