கொடைகார அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


கொடைகார அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 2 Dec 2022 7:30 PM GMT (Updated: 2 Dec 2022 7:31 PM GMT)

கொடைகார அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:-

நல்லம்பள்ளி அருகே ஜருகு கிராமத்தில் சின்னஏரி பகுதியில் கொடைகார அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி மங்கள இசை முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடைகார அம்மனுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை, தீபாராதனை நடந்தது. விழாவில் ஜருகு, ஈசல்பட்டி, கடத்திகுட்டை, மாணிக்கம்புதூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story