கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு


கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு
x

பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி இறந்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது65). இவர் குப்புச்சிபாளையம் அருகே உள்ள கோவில்காடு ராஜா நகர் பகுதியில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்ச சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் அங்குள்ள கிணற்றுக்கு அருகே அவரது துண்டு கிடந்துள்ளதை பார்த்தனர். செல்லமுத்து கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரை கிணற்றில் தேடினர். சுமார் 4 மணிநேர தேடுதலுக்கு பிறகு செல்லமுத்து உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதனையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story