மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது


மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
x

அணைக்கட்டு அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

வேலூர்

அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கரடிகுடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40), கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு கலையரசி (31) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

சரவணன் தினமும் மதுகுடித்து விட்டு வந்து, மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். அதன்படி சரவணன் நேற்று இரவு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், கத்தியை எடுத்து கலையரசியை குத்தி உள்ளார். இதனால் கலையரசி கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சரவணன் தப்பி ஓடிவிட்டார்.

படுகாயம் அடைந்த கலையரசியை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை இன்று கைது செய்தனர்.


Related Tags :
Next Story