கூலி தொழிலாளி போக்சோவில் கைது


கூலி தொழிலாளி போக்சோவில் கைது
x

திருவண்ணாமலையில் கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

பல இடத்தில் தேடியும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கீழ்பென்னாத்தூா் கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிஅன்பரசு (வயது 21) என்பவர் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ள கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்பரசுவை கைது செய்தனர்.

மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story