தாயின் கல்லறையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


தாயின் கல்லறையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2023 6:45 PM GMT (Updated: 1 April 2023 6:46 PM GMT)

ஆகாத ஏக்கத்தில் தாயின் கல்லறையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் தாயின் கல்லறையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

வெளிநாட்டில் வேலை

மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்றை சேர்ந்தவர் சிவநாடார். இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன் பிரபு (வயது37), தொழிலாளி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ெசாந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் அவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பல இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால், திருமணம் நடைபெறவில்லை.

இதனால் பிரபு கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

விஷம் குடித்து தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரபு வீட்டின் அருகே உள்ள தாயின் கல்லறை அருகே விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகாத ஏக்கத்தில் தாயின் கல்லறையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story