கூலி தொழிலாளி மர்ம சாவு


கூலி தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறையில் கூலி தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை திருவிழந்தூர் ராமர் மடம் அருகே நேற்று முன்தினம் மதியம் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் இறந்தவர் குறித்து சமூக வலைதளங்களில் படத்துடன் கூடிய தகவல்களை போலீசார் வெளியிட்டனர். விசாரணையில் இறந்தவர் மயிலாடுதுறை ரெயிலடி கங்கை நகரை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் ஸ்டாலின் (வயது 33) என்பது தெரியவந்தது. கூலித் தொழிலாளியான அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததும், நேற்று முன்தினம் வீட்டில் மனைவி ராஜேஸ்வரியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் மது அருந்திவிட்டு கீழே விழுந்து இறந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் மர்மசாவு என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story