ஒகேனக்கல்லில் சோகம்: காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


ஒகேனக்கல்லில் சோகம்: காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி

பென்னாகரம்:

கூலித்தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் முனுசாமி (வயது 33), கூலித்தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் தனது உறவினரின் காரிய நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளார். ஊட்டமலை பரிசல் துறை காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர்.

ஆற்றில் மூழ்கினார்

அப்போது முனுசாமி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக காவிரி ஆற்றில் மூழ்கினார். இதை பார்த்த உறவினர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், பரிசல் ஓட்டிகளின் உதவியோடு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முனுசாமியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

உடல் கரை ஒதுங்கியது

இதனிடையே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முனுசாமியின் உடல் நேற்று ஊட்டமலை பரிசல் துறை அருகே கரை ஒதுங்கியது. இதைப்பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி இருந்த முனுசாமிக்கு தீபா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

1 More update

Next Story