லாரி மோதி தொழிலாளி பலி

ஆம்பூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.
ஆம்பூர் அருகே பள்ளி தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 25), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின்னர் சாலையில் பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





