லாரி மோதி தொழிலாளி சாவு


லாரி மோதி தொழிலாளி சாவு
x

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த கூலித்தொழிலாளி லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40). கூலித்தொழிலாளி. நேற்று இவர், கோவையில் இருந்து பஸ்சில் பழனிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து அருகே உள்ள தாழையூத்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தாழையூத்து சின்டெக்ஸ் மில் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story