தக்கலை அருகே லாரி மோதி தொழிலாளி சாவு


தக்கலை அருகே லாரி மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 18 Jan 2023 6:45 PM GMT (Updated: 18 Jan 2023 6:45 PM GMT)

தக்கலை அருகே லாரி மோதி தொழிலாளி இறந்தார்

கன்னியாகுமரி

தக்கலை:

திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர் வேலப்பன். இவருடைய மகன் ஸ்ரீகண்டன் (வயது 31), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சாமியார் மடம் பகுதியில் செல்லும் போது பின்னால் பாறைப்பொடி ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் ஸ்ரீகண்டன் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்ரீகண்டன் இறந்து விட்டதாக கூறினார்கள்.

இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் விரிகோடு பகுதியை சேர்ந்த தனேந்திரன் (36) என்பவர் மீது தக்கலை ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story