சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலி


சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 26 Sep 2023 6:45 PM GMT (Updated: 26 Sep 2023 6:46 PM GMT)

சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி உயிாிழந்தாா்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 55), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மாதவச்சேரியில் உள்ள தனது மகள் ராஜேஸ்வரியை பார்ப்பதற்காக உறவினர் சோழம்பட்டை சேர்ந்த ஏழுமலை மகன் சிவசங்கர் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கு ராஜேஸ்வரியை பார்த்து விட்டு இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சிவசங்கர் ஓட்டினார். கொசப்பாடி ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்தபோது செல்லம்பட்டில் இருந்து பாலப்பட்டு நோக்கி சென்ற டிராக்டர், இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சிவசங்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story