சிறுமியை கற்பழித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை-போக்சோ கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கற்பழித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை-போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமியை கற்பழித்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை

சிறுமியை கற்பழித்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுமி கற்பழிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா நெடுங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 48), தொழிலாளி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி 16 வயதுடைய சிறுமியை கடத்தி கற்பழித்து உள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இது குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்தனை கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கில் மைதிலி ஆஜரானார்.

10 ஆண்டுகள் சிறை

இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கற்பழித்த ஆனந்தனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் பரிந்துரை செய்தார். பின்னர் ஆனந்தனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story