மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு


மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
x

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி இறந்தார்.

தஞ்சாவூர்

தஞ்சை அருகே உள்ள மருங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மயிலாம்பாள் (வயது 75). சம்பவத்தன்று இவர் தனது வீட்டிலிருந்து காய்கறி வாங்குவதற்காக மருங்குளம் கடைவீதிக்கு நடந்து வந்தார். மருங்குளம் நான்கு ரோடு அருகே வந்தபோது அவர் மீது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மயிலாம்பாள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story