தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தை சேர்ந்த சந்திரபோஸ் என்பவரின் மனைவி தீபா (வயது28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் தீபா கடந்த 8-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தீபா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story