லாலாபேட்டை பகவதி அம்மன் கோவில் வைகாசி தேரோட்டம்


லாலாபேட்டை பகவதி அம்மன் கோவில் வைகாசி தேரோட்டம்
x

லாலாபேட்டை பகவதி அம்மன் கோவில் வைகாசி தேரோட்டம் நடந்தது.

கரூர்

கிருஷ்ணராயபுரம்,

திருவிழா

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை கொடிக்கால் தெருவில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த 3-ந்தேதி கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகாசி தேரோட்டம் நேற்று மதியம் நடந்தது.

தேரோட்டம்

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட பூ மாலைகள், பழங்கள், தோரணங்கள் இருந்த தேரில் பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை தங்கள் தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனர். அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடிநின்ற பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேர்த்திக்கடன்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிச்சட்டி எடுத்தும், கிடா வெட்டியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். நாளை (திங்கள்கிழமை) பச்சநாச்சி அம்மன் மற்றும் கருப்பத்தூர் தாழம்பூ மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை, சந்தன காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கரகம் கருவறையில் இருந்து புறப்பட்டு வீதிஉலா முடித்து காவிரி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ந்தேதி (வியாழக்கிழமை) விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைகிறது.


Next Story