ரூ.30 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு


ரூ.30 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
x

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டர்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்:

ஆக்கிரமிப்பு

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பந்தநல்லூரில் பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் பந்தநல்லூர் பிரதான சாலையில் உள்ளது. இந்த நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருந்தார்.

மேலும். இந்த கட்டிடத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தவில்லை என பசுபதீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், மயிலாடுதுறை அறநிலையத் துறை இணை ஆணையர் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ரூ.30 லட்சம் நிலம் மீட்பு

இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்து சமபய அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி தலைமையில் துணை ஆணையர் சாந்தா, கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ், அறநிலையதுறை ஆய்வாளர் கோகிலா தேவி மற்றும் அலுவலர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,664 சதுர அடி நிலத்தை மீட்டனர்.

மேலும், அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என விளம்பர பதாகையையும் அமைத்தனர். இதையடுத்து, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் அங்கு பந்தநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story