ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.30 லட்சம் நிலம் மீட்பு


ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.30 லட்சம் நிலம் மீட்பு
x
தினத்தந்தி 26 Jun 2023 6:55 PM GMT (Updated: 27 Jun 2023 10:52 AM GMT)

ராராமுத்திரக்கோட்டை ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.30 லட்சம் நிலம் மீட்கப்பட்டது.

தஞ்சாவூர்

ராராமுத்திரக்கோட்டை ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.30 லட்சம் நிலம் மீட்கப்பட்டது.

ரூ.30 லட்சம் நிலம்

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே ராராமுத்திரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வருவாய் கிராமத்தில் 50 சென்ட் அரசு நிலம் பல ஆண்டுகளாக தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இங்கு நெல் சாகுபடியும் செய்யப்பட்டு வந்தது. ரூ.30 லட்சம் மதிப்பிலான இந்த நிலைத்தை மீட்க ஊராட்சி மன்ற தலைவர் சோழன் முயற்சி மேற்கொண்டார்.

இந்த நிலையில் மண்டல துணை தாசில்தார் விவேகானந்தன், நில அளவையர் அழகேசன், வருவாய் ஆய்வாளர் கமலி, கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் ஆகியோரை கொண்ட குழுவினர் மற்றும் ஊராட்சிதுறையினர் மூலம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

வரப்பு அமைக்கும் பணி

மீட்கப்பட்ட அரசு நிலத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு வரப்பு அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புனிதாபிரகலாதன், ஊராட்சி செயலாளர் அசோக், பணிதள பொறுப்பாளர்கள், தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கும், வருவாய்த்துறையினருக்கும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story