பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு


பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு
x

பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் முதல் பிட் ஊராட்சியை சார்ந்த கூத்தியார்குண்டில் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை அறையில் பூட்டை உடைத்து மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்து லேப்டாப், சார்ஜர், பை மற்றும் சில பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story