வக்கீல்கள் சாலை மறியல்


வக்கீல்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 May 2023 6:45 PM GMT (Updated: 9 May 2023 6:45 PM GMT)

செஞ்சியில் வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி நீதிமன்றத்தில் வக்கீலா பணிபுரிபவர் பாபு. இவர், ஒரு வழக்கு சம்பந்தமாக செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டரை சந்தித்து பேசினார். அப்போது அவர், வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதை கண்டித்து 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே இவர்களை செஞ்சி போலீசார் சமாதானம் செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜோதி மீது துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னாவிடம் வக்கீல்கள் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்ற அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story