சேரன்மாதேவியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


சேரன்மாதேவியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

சேரன்மாதேவியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி நீதிமன்ற வரம்பில் இருந்து வரும் வீரவநல்லூர் போலீஸ் நிலைய எல்கையை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். பாப்பாக்குடி போலீஸ் நிலையம் சேரன்மாதேவி வட்டத்தில் இருப்பதால் சேரன்மாதேவி நீதிமன்ற வரம்பில் கொண்டுவர வேண்டும். சேரன்மாதேவியில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேரன்மாதேவி வக்கீல்கள் சங்கம் சார்பில் கடந்த 18-ந்தேதியில் இருந்து தொடர்ந்து கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கோர்ட்டுக்கு வந்த வக்கீல்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் சந்தானகுமார், பொருளாளர் ஆறுமுகம், வக்கீல்கள் ராஜகோபால், ஆறுமுகபூபதி, குத்தாலிங்கம், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இன்றும் (வெள்ளிக்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட இருப்பதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.


Next Story