கோர்ட்டு பணிகளை புறக்கணித்த வக்கீல்கள்

கோர்ட்டு பணிகளை வக்கீல்கள் புறக்கணித்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தாலுகா கோர்ட்டு வளாகம் உள்ளது. இங்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல்களுக்கு நிா்வாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டியும், வக்கீல்களுக்கு எதிரான போக்கை கைவிட வலியுறுத்தியும் 'தி திருச்சிராப்பள்ளி பார் அசோசியேசன்' சார்பில் 2 நாட்கள் ஸ்ரீரங்கத்தில் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு பணியில் ஈடுபடாமல் புறக்கணிப்பு செய்தனர். இந்த போராட்டம் இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடரும் என்று வக்கீல்கள் சங்க செயலாளர் மதியழகன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





