விநாயகர் சிலை பற்றி வாட்ஸ்-அப்பில் தவறான தகவல் பரப்பியவர் மீது சட்டப்படி நடவடிக்கை


விநாயகர் சிலை பற்றி வாட்ஸ்-அப்பில் தவறான தகவல் பரப்பியவர் மீது சட்டப்படி நடவடிக்கை
x

புதுக்கோட்டை கலெக்டா் முகாம் அலுவலகத்தின் விநாயகர் சிலை பற்றி வாட்ஸ்-அப்பில் தவறான தகவல் பரப்பியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை

கலெக்டர் முகாம் அலுவலகம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார். கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் அவர் தங்குவதற்காக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் பழமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அந்த சிலை சேதமடைந்ததாகவும் வாட்ஸ்-அப்பில் நேற்று முதல் தகவல் பரவியது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜயகுமார் தலைமையில் நிர்வாகிகள் இன்று கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலையை பார்க்க வேண்டும் என பா.ஜ.க. நிர்வாகிகள் கூறினர். ஆனால் அவர்களை உள்ளே விட போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சட்டப்படி நடவடிக்கை

இந்த நிலையில் கலெக்டர் மெர்சி ரம்யா, பா.ஜ.க. நிர்வாகிகளை கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சேதமடையவில்லை எனவும், இதுபற்றி தவறான தகவல் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து பா.ஜ.க. நிர்வாகிகள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலை தொடர்பாக வாட்ஸ்-அப்பில் பரவிய தகவல் உண்மை இல்லை எனவும், அரசியலமைப்பு சட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம் கொள்ள ஏதுவாக திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இதுபோல் தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிைலயின் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

சைபர் கிரைம் போலீசில் புகார்

இதற்கிடையில் சைபர் கிவிநாயகர் சிலை பற்றி வாட்ஸ்-அப்பில் தவறான தகவல் பரப்பியவர் மீது சட்டப்படி நடவடிக்கைவிநாயகர் சிலை பற்றி வாட்ஸ்-அப்பில் தவறான தகவல் பரப்பியவர் மீது சட்டப்படி நடவடிக்கைரைம் போலீசில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வாட்ஸ்-அப்பில் அந்த விநாயகர் சிைலயின் படம் மற்றும் தகவலை பரப்பிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தவறான தகவல் பரப்பிய அந்த நபர் மீதும், அதே தவறான தகவலை பரப்புவோர் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலானது

புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அந்த சிலை சேதமடைந்ததாகவும் வாட்ஸ்-அப்பில் பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தவறான தகவல் எனவும், இதனை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்டம் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் சமூகவலைத்தளத்தில் வைரலானது. கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்த பழைய விநாயகர் சிலையின் புகைப்படமும், தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட விநாயகர் சிலையின் புகைப்படமும் விவாதபொருளாக மாறியது. ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்த சிலையை அகற்றி விட்டு வேறு இடத்தில் வைத்திருப்பதாகவும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தற்போது சமூகவலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story