சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

முத்தாம்பாளையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் முத்தாம்பாளையம் சமுதாயக்கூடத்தில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி சட்ட உதவி மையம் மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ஞானப்பிரகாசம் அனைவரையும் வரவேற்றார். அய்யங்கோவில்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சத்யாராஜேந்திரன், பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் மேகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ராதிகா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் திருஞானசம்பந்தம் ஆகியோர் சட்ட கருத்துரை வழங்கினர். முடிவில் முதன்மை சார்பு நீதிபதி விஜயகுமார் நன்றி கூறினார்.


Next Story