சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

பாபநாசத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

தஞ்சாவூர்

பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல்கனி கலந்துகொண்டு பேசினார். இதில், திருநங்ககைளும் கலந்து கொண்டனர். அப்போது நீதிபதி பேசுகையில், திருநங்கைகளையும் சமுதாயத்தில் மனிதர்களாக மதிக்க வேண்டும். அனைத்து திறமைகளும் அவர்களிடம் உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் திருநங்கைகளை மதிப்பதுடன், மற்றவர்களும் திருநங்கைகளை மதிக்க அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முகாமில் சிறந்த திருநங்கைக்கான டாக்டர் பட்டம் பெற்ற தஞ்சாவூரை சேர்ந்த ராகினி மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த திருநங்கையும் கலந்து கொண்டு பேசினர். முகாமில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், ஆசிரிய-ஆசிாியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.





Next Story