அரசு கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்


அரசு கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
x

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான சந்திரசேகர் தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி நரசிம்மமூர்த்தி ஆகியோர் பேசினர். முகாமில் மாணவ-மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம் மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story