கோத்தகிரி அருகே வாகனம் மோதி சிறுத்தை பூனை சாவு


கோத்தகிரி அருகே வாகனம் மோதி சிறுத்தை பூனை சாவு
x
தினத்தந்தி 14 Aug 2023 7:30 PM GMT (Updated: 14 Aug 2023 7:31 PM GMT)

கோத்தகிரி அருகே வாகனம் மோதி சிறுத்தை பூனை சாவு

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு அண்ணாநகர் செல்லும் சாலையில் நேற்று காலை சிறுத்தை பூனை ஒன்று வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தைப் பூனையின் உடலை மீட்டுச் சென்றனர்.

பின்னர் கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்த பின் சிறுத்தை பூனையின் உடல் புதைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில் சிறுத்தைப் பூனை சாலையைக் கடக்க முயற்சி செய்த போது, அடையாளம் தெரியாத வாகனம் அதன் மீது மோதியதில் பலத்த காயமடைந்து சிறுத்தை பூனை உயிரிழந்துள்ளது. இரவு நேரத்தில் வாகனங்களை இயக்கும் போது வனவிலங்குகள் சாலையைக் கடக்கின்றனாவா எனப் பார்த்து எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story