வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி


வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 4 Oct 2023 7:30 PM GMT (Updated: 4 Oct 2023 7:30 PM GMT)

பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி வனச்சரகம் சேத்துமடை மேற்கு பிரிவு போத்தமடை பீட் அய்யப்பன் கோவில் சரக பகுதியில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்கவ தேஜா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அட்டக்கட்டி உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் புகழேந்தி ஆகியோரது முன்னிலையில் வன கால்நடை உதவி டாக்டர் விஜயராகவன், டாக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் இறந்த சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பிறகு சிறுத்தையின் உடல் தீயிட்டு எரிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இறந்த ஆண் சிறுத்தைக்கு 7 வயது இருக்கும். வேறு விலங்குடன் சண்டை போடும் போது இறந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.


Next Story