விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2023 6:45 PM GMT (Updated: 19 Jan 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் கா.மை.அகமது இக்பால் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் முன்னிலை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் கலைவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனித மலத்தை கலந்த சம்பவத்தை கண்டித்தும், இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வணிகர் அணி அமைப்பாளர் சுலைமான், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் காஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மாவட்ட துணைச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.


Next Story