விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2023 6:45 PM GMT (Updated: 19 Jan 2023 6:47 PM GMT)

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த சம்பவத்தை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மோகன்குமார், காமராஜ், விஜயரங்கன், கனிவல்லவன், பெருவழுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் இளஞ்சிறுத்தைகள் பாசறை செயலாளர் அன்புச்செல்வன் வரவேற்றார். இதில் கட்சியின் அமைப்புச்செயலாளர் தலையாரி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த சம்பவத்தை கண்டித்தும், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் கதிர்வளவன், ஸ்டாலின், ரியாஸ்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story