அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய நூலகம் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் திறந்து வைத்தார்


அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய நூலகம்  முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 10 March 2023 6:45 PM GMT (Updated: 10 March 2023 6:45 PM GMT)

அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய நூலகத்தை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள முனைவன்றி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி நூலகம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. புதிய நூலக கட்டிடத்தை முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பள்ளி மாணவர்களுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் அல்அமீன், மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், வட்டார துணை தலைவர்கள் கருப்பையா, ராஜ்குமார், இளையான்குடி நகர தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story