ஆயுள் தண்டனை கைதி சாவு


ஆயுள் தண்டனை கைதி சாவு
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் இறந்தார்.

கோயம்புத்தூர்


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-சிறுமுகை ரோட்டில் உள்ள வ.உ.சி.வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற அப்துல்லா (வயது 42). இவர் 2011-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு நேற்று முன்தினம் சிறையில் வைத்து திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story