ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு


ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
x

வேலூர் ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி திடீரென இறந்தார்.

வேலூர்

தர்மபுரி மாவட்டம் கொங்கராப்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 39). 2015-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் பொம்மிடி போலீசார் ரவியை கைது செய்தனர். அவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதற்கு அவர் ஜெயிலில் உள்ள மருத்துவமனையிலும், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28-ந் தேதி அவருக்கு உடல்நிலை மோசமானதால் ஜெயிலில் இருந்து, அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story