திருக்கோவிலூர் அருகேமது பாட்டில்கள் விற்றவர் கைது

திருக்கோவிலூர் அருகே மது பாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள ஆலூர் கிராமத்தில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே ஊரைச் சேர்ந்த கருப்பன் மகன் குமார் (வயது 43) என்பவர் மதுபாட்டில்களை அவரது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, குமாரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





