குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது


குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
x
தினத்தந்தி 18 July 2023 6:45 PM GMT (Updated: 18 July 2023 6:46 PM GMT)

கீழ்வேளூர் அருகே குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே வெண்மணி ஊராட்சி கீழக்காவாலக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் தவமணி (வயது 52). இவர் கீழ்க்காவாலக்குடி பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில், இவர் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயம் விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக தவமணி கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை தொடர்ந்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில், கீழ்வேளூர் போலீசார் நாகை சிறையில் இருந்த தவமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story