சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா வதியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 29). இவர் சாராய விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சாமிநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





