சாராயம் விற்றவர் கைது


சாராயம் விற்றவர் கைது
x

மணல்மேடு அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

மணல்மேடு.

மணல்மேடு அருகே உள்ள குறிச்சி பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது குறிச்சி பாலம் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குறிச்சி மேற்குத்தெருவை சேர்ந்த ஸ்டாலின் (வயது34) என்பவரை கைது செய்தும் அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் குறிச்சி வாட்டர் டேங் அருகே சாராயம் விற்பனை செய்த குறிச்சி மேலத்தெருவை சேர்ந்த சின்னையன் மகன் கணேசன் தப்பி ஓடிவிட்டார். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 55 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குறிச்சி மேலத்தெருவில் மதுபாட்டில் வைத்து மது குடிப்பதற்கு இடம் அளித்த துளசி மனைவி பாப்பம்மாள் (60) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story