மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:46 PM GMT)

மார்த்தாண்டம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

மார்த்தாண்டம் பகுதியில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவிற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி பாகோடு ஏலாக்கரைவிளைவீட்டை சேர்ந்த சசி (வயது 42) என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சசியை கைது செய்த போலீசார், அங்கிருந்து 20 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story