டீக்கடையில் மதுவிற்றவர் கைது

பள்ளிபாளையம் அருகே டீக்கடையில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அருகே மொளசி ராக்கிய வலசு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் டீக்கடையில் மது விற்பனை செய்வதாக மொளசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் டீக்கடையில் சோதனை செய்தனர். அப்போது சரவணன் மறைத்து வைத்து மதுவிற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து 16 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





