சாராயம் விற்றவர் கைது


சாராயம் விற்றவர் கைது
x

திருமருகல் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

.திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் திருமருகல் அருகே கயத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஏனங்குடி ஊராட்சி கயத்தூர் மெயின்ரோட்டை சேர்ந்த செல்வராஜ் (வயது 43) என்பது தெரிய வந்தது. .இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story