சாராயம் விற்றவர் கைது


சாராயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 17 April 2023 6:45 PM GMT (Updated: 17 April 2023 6:45 PM GMT)

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்றவர் கைது

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே கோகூர் ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோகூர் மாதா கோவில் அருகே வெட்டாறு பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகூர் வண்ணான் குளம் வடகரை பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 38) என்பதும், அவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த கீழ்வேளூர் போலீசார் வெற்றிவேலை கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story