மது விற்றவர் கைது
காவேரிப்பாக்கம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கத்தை அடுத்த பொன்னப்பந்தாங்கல் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்கப்படுவதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது போலீசார் வருவதை கண்டு தப்பியோட முயன்ற நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில்அவர் எடையந்தாங்கல் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் (வயது 41) என்பதும், ெது விற்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார்கைது செய்து, 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story