சுதந்திர தினத்தன்று மது கடைகளுக்கு விடுமுறை


சுதந்திர தினத்தன்று மது கடைகளுக்கு விடுமுறை
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந்தேதி (திங்கட்கிழமை) மூடி வைக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

மீறி விற்பனை செய்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மதுக்கூட உரிமை தாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story