சீனாபுரம் மாட்டுச்சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை


சீனாபுரம் மாட்டுச்சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
x

சீனாபுரம் மாட்டுச்சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது.

ஈரோடு

பெருந்துறை

சீனாபுரம் மாட்டுச்சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது.

மாட்டுச்சந்தை

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் மாட்டுச்சந்தை நேற்று கூடியது. இதற்கு நேற்று சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 150-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 100-ம் விற்பனைக்கு வந்திருந்தன. இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி என கறவை மாடுகள் 120-ம், இந்த இன கிடாரி கன்றுகள் 150-ம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

நேற்றைய விற்பனையில், விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.37 ஆயிரம் வரையும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், சிந்து மற்றும் ஜெர்சி இன கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், இதே வகை கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் விலை போனது.

ரூ.80 லட்சத்துக்கு விற்பனை

மொத்தம் கால்நடைகள் ரூ.80 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த கால்நடைகளை, காங்கேயம், சென்னிமலை, திருப்பூர், ஊத்துக்குளி, அவல்பூந்துறை, குன்னத்தூர், திங்களூர், காஞ்சிக்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி வாங்கி சென்றனர்.

கடந்த 6 மாதங்களாக, போதிய மாடுகள் வரத்து இல்லாது விற்பனை குறைந்து காணப்பட்ட சீனாபுரம் மாட்டுச்சந்தை நேற்று மீண்டும் களை கட்டியது குறிப்பிடத்தக்கது.


Next Story