மின்தடை ஏற்படும் இடங்கள்


மின்தடை ஏற்படும் இடங்கள்
x

7-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்

திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி மின்கோட்டத்துக்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் காரையாறு, சேர்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டை விலைப்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏ.பி.நாடானூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

அதேபோல் கரிவலம்வந்தநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி 7-ந் தேதி நடைபெற இருப்பதால் கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வினியோக செயற்பொறியாளர்கள் சுடலையாடும் பெருமாள் (கல்லிடைக்குறிச்சி), தங்கராஜ் (சங்கரன்கோவில்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story