காயல்பட்டினம், தண்டுபத்து பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


காயல்பட்டினம், தண்டுபத்து பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

காயல்பட்டினம், தண்டுபத்து பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

காயல்பட்டினம், தண்டுபத்து பகுதியில் இன்று(வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து திருச்செந்தூர் கோட்ட மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேதமடைந்த மின்கம்பங்கள்...

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகநேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் மழை காலங்களில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.

மின்தடை

இதனால் அமலிநகர், தோப்பூர், கரம்பவிளை, தெப்பகுளம் ரோடு, வண்ணாந்திரைவிளை, பரமன்குறிச்சி ரோடு, வன்னியங்காடு, பள்ளத்தூர், மனக்காடு, வன்னிமாநகரம், குடியிருப்பு விளை, கீழ பள்ளிப்பத்து, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, சியோன்நகர் பகுதிகளிலும்,

பிச்சிவிளை, நாலுமூலைகிணறு, நா.முத்தையாபுரம், ஆழ்வார்தோப்பு, பிள்ளைவிளை, நகனை, தோப்பூர், ஏழுவரைமூக்கி, கல்விளை, வெள்ளமடம், சின்னமதிகூடல், சின்னமாடன்குடியிருப்பு, குறிப்பன்குளம், உடையார்குளம், காயல்பட்டினம் கடற்கரை, காட்டுமொகதூம்பள்ளி, ஓடக்கரை, அழகியவிளை, படுக்கப்பத்து, அழகப்பபுரம், பிச்சிவிளை, வெயலுகந்தம்மன்புரம், மெய்யூர், கடாச்சபுரம், போலையார்புரம், கொழுந்தட்டு, வாலத்தூர், சவுக்கியபுரம், வேலவன்புதுக்குளம், நெடுங்குளம், கோமாநேரி, கலுங்குவிளை, கூவைகிணறு ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story