இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் இடங்கள்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பராமரிப்பு பணி

திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட கல்லாமொழி உபமின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம் மற்றும் உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகளுக்கும் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

அதேபோல், திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகளை சரி செய்தல் போன்ற பணிகள் இன்று மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, ஆலந்தலை, காயாமொழி, தைக்காவூர், நைனாபத்து, சீர்காட்சி, சதுக்கை தெரு, கொம்புத்துறை, புன்னக்காயல், வள்ளிவிளை, கானம், வானுபன்விளை, குலசை ரஸ்தா, பயைமின்கடை தெரு, பழங்குளம், அறிவான்மொழி, தேர்க்கன்குளம், வெள்ளரிக்காயூரணி, பிரகாசபுரம், செம்பூர், பத்தவாசல், வேலன்காலனி, ஆதிநாதபுரம், இலங்கநாதபுரம், அடைக்கலாபுரம், ராமசாமிபுரம், சந்தைகடை தெரு, செட்டியாபத்து ரோடு, குலத்தெரு, பஸ்ஸ்டாண்டு ரோடு, பரமன்குறிச்சி ரோடு, பிறைகுடியிருப்பு, கொட்டங்காடு ரோடு, படுக்கப்பத்து அரசு ஆஸ்பத்திரி முன்பு, தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.

நாளை

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் சரிசெய்தல் போன்ற பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, தோப்பூர், அமலிநகர், கடாட்சபுரம், மானாடு, செட்டிவிளை, சோலைகுடியிருப்பு, ஓடக்கரை, பூந்தோட்டம், தெற்குமறந்தலை, இடையன்விளை, நாலுமாவடி, வீரமாணிக்கம், பொத்தகாளன் விளை, நரையன்குடியிருப்பு, பழங்குளம், சவேரியார்புரம், உடையார்குளம், அழ்வார்தோப்பு, வரதராஜபுரம், இலங்கநாதபுரம், இராமசாமிபுரம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, புதுமனை பள்ளிவாசல், மணப்பாடு, சுண்டங்கோட்டை, அம்பாள்குளம், உதிரமாடன் குடியிருப்பு, உடைபிறப்பு, கடகுளம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story