ஸ்வீட் கடையில் ரூ.2½ லட்சம் கொள்ளை


ஸ்வீட் கடையில் ரூ.2½ லட்சம் கொள்ளை
x

ஸ்வீட் கடையில் ரூ.2½ லட்சம் கொள்ளை போனது.

திருச்சி

மலைக்கோட்டை:

திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு ஸ்வீட் கடையை, நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் ஊழியர்கள் பூட்டிச்சென்றனர். நேற்று காலை அவர்கள் மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் மேற்புற பலகை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கடையின் மேலாளர் செந்தில், கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த ஸ்வீட் கடைக்கு வந்த மர்ம நபர்கள் கடையின் முன்பகுதி கதவுக்கு வெளியே மேற்பகுதியில் உள்ள பலகையை உடைத்துள்ளனர். அதன் வழியாக மேலே ஏறிய அவர்கள் உள்பக்கம் சென்று கல்லாப்பெட்டிக்கு நேராக இருந்த பலகையை உடைத்து உள்ளே இறங்கி, கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கடையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story